Wednesday 24 February 2010

பாலியல் பலாத்காரத்தை தட்டிக்கேட்டவர் இராணுவத்தால் சுட்டுக்கொலை

பாலியல்பலாத்காரத்தை தட்டிக்கேட்ட இளைஞர் இராணுவத்தால் சுட்டுக்கொலை
செவ்வாய், பிப்ரவரி 23, 2010 14:18 பதிவு இணையதளம்
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்றம்
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொட்புடைய இராணுவத்தினரை கிராம மக்கள் அடையாளம் காட்டக் கூடாது என்றும் அவ்வாறு அடையாளம் காட்ட முற்பட்டால் அவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

========================================================
இனவெறிப்பாசிச சிறீலங்கா அரசே!
* ஈனத்தனமான உன் இராணுவத்தை ஈழத்தில் இருந்து வெளியேற்று!

* '' 83 இற்கு முந்திய நிலைக்கு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்'' என்ற ஒற்றையாட்சி சண்டியன் சம்பந்தனின் கோரிக்கை தமிழ்மக்களின் அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடுப்பதே!

* சிறுவர்களை புலிகள் சேர்ப்பதாக மார்பில் அடித்து ஓலமிட்ட மனித உரிமைவாதிகளே, ஒன்பது வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இறைமையுள்ள படையின் ஈனச்செயலுக்கு தங்கள் பதில் என்ன?

* பயங்கரவாதத்தை ஒழித்தவர்களே; பாலியல் பலாத்காரத்தை நிறுத்துவீர்களா?

* ஒற்றையாட்சி ஒநாயே வேண்டாம் உனது ஒற்றுமை,
ஆயுதம் ஏந்துவது எமது அரசியல் உரிமை!

===========================

Tuesday 23 February 2010

உலகத்தில் ஒழுக்கமான இராணுவமும் ஒன்பது வயது மாணவியும்!


கிழக்கின் உதயம்!
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் சித்தாண்டிக்கு அருகில் உள்ள திகிலிவெட்டையில் படையினரின் பாலியல் வன்முறைக்குள்ளான ஒன்பது வயதுச் சிறுமி.
படையினரின் காட்டுமிராண்டித்தனம் - திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
திகதி: 21.02.2010 // தமிழீழம் சங்கதி
திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 4இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில், 3 சிறீலங்கா இராணுவத்தினர் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த
இராணுவத்தினர் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவத்தினரிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார்.

பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க முடியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதாகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் பிரம்மை பிடித்த நிலையிலும் காணப்பட்டதாகவும் உணர்வு குறைந்த நிலையில் அப்பிள்ளை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

12-02-2010 அன்று மாலை 5 மணியளவில் பிள்ளையை மாவடிவேம்பு வைத்தியசாலையில் பிள்ளையின் தாய் மற்றும் சிறிய தாயும் சேர்த்துள்ளனர். 12-02-2010 மாலை 6 மணிக்கு பின்னர் இரு சிறீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு சென்று பிள்ளையின் உள்ளாடைகளை பசோதனைக்காக எடுத்து செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். 13.02.2010 சனிக்கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் ஞாயிறு தொடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை வைத்திருந்தனர். இதையடுத்து, கிராமத்தில் பதற்றநிலை காணப்பட்டது. உந்துருளிக் குழுவினர் (அப்பாஜ் குழுவினர்) போவோர் வருவோரை விசாரித்தார்கள். இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் காவல்துறையினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறீலங்கா காவல்துறையினர் இது தொடர்பாக கூறுகையில் நான்கு இராணுவத்தினரை கைது செய்தாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெவித்தனர். அப்பிள்ளையை பல இராணுவத்தினர் மற்றும் அயல் கிராம காவல்துறையினர் பயறுத்தியதாகவும் பிள்ளை பயந்த நிலையில் உள்ளதாகவும் இராணுவ சீருடையை கண்டால் பயப்படுவதாகவும் தாயாரால் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அறிந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி, காவல்துறை பொறுப்பதிகாரி போன்றோர் சிறுமியை தனித்தனியாக விசாரித்ததில் சிறுமி பயத்துடன் காணப்படுவதுடன் சிறுமியின் தாய் தந்தையர் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர். 15-02-2010 அன்று மாலை திகிலிவட்டையில் இருந்த அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதுடன் மற்றும் அவர்களால் ஏற்கனவே இயங்கி வந்த கடையும் அகற்றப்பட்டது.

இருந்த போதிலும் மீண்டும் கிராமத்து மக்களிடம் வந்த இராணுவம் முகாம் இங்கே இருக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதாக கூறி அச்சுறுத்தியதன் மூலம் 17-02-2010 அன்று காலையில் கிடைத்த தகவல்படி மீண்டும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர.; 18-02-2010 அன்று DCPU அமைப்புடன் தொடர்பு கொண்ட போது, சட்ட மருத்துவ அதிகாரியின்
அறிக்கை 17-02-2010 மாலை கிடைத்ததாகவும் பிள்ளையை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
பிள்ளையின் பெற்றோர்களும் கிராமத்தவர்களும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சந்திரசேகரம் சுகபாலன் கடந்த 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு காவல்துறையினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவன் மனைவியின் தகப்பனார் சம்பவத்தினால் ஆத்திரமுற்று இராணுவத்தினரையும் குற்றப்புலனாய்வு பிரிவினரையும் திட்டித் தீர்த்ததாக தகவல்கள் தெவிக்கின்றன. இச்சம்பவம் சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தகவல்கள் கசின்றன.

Sunday 21 February 2010

சம்பந்தனின் காடைத்தனம்

தமிழ்த் தேசிய ஆதரவாளர்களை புறந்தள்ளி த.தே.கூட்டமைப்பை இந்திய கைக்கூலி இயக்கமாக மாற்றுகிறீர்கள்- வானொலி நேயர்
உன்னுடைய கருத்தை நான் உதாசீனம் செய்கின்றேன் - சம்பந்தன் ( தொலைபேசி துண்டிப்பு )
இரா.சம்பந்தன் கனேடிய தமிழ் வானொலிப் பேட்டியில் காடைத்தனமாக நடந்து கொண்டதையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை!
(நேர்காணல் ஒலி வடிவில் -உருவப் படத்தில் இரட்டை அழுத்தம் செய்க)

Thursday 18 February 2010

We need a new Tamil leadership to emerge. India

We need a new Tamil leadership to emerge.

Sri Lankan high commissioner to India Prasad Kariyawasam told IANS in an interview in New Delhi.
February 11th, 2010 - 11:08 am ICT by IANS -
By Manish Chand
New Delhi, Feb 11 (IANS) Highlights ENB

* "We and India are on the same page over empowering people in the north and east. However, the fact is that we need a new Tamil leadership to emerge. We can’t work with diaspora groups who are enamoured by the idea of separatism," said Kariyawasam

* “In the last 25-30 years, the LTTE (Liberation Tigers of Tamil Eelam) had eliminated the moderate Tamil leadership. We now have a historic opportunity for the emergence of the moderate Tamil leadership and to create conditions for reconciliation,” he said.

* The envoy said the promised devolution of powers to the Tamils would take place step by step and emphasised that President Mahinda Rajapaksa was waiting for the moderate democratic leadership to emerge before fast-tracking the process.

* Indicating a lasting settlement with the Tamils who comprise around 12 percent of the population, the envoy said the reconciliation and devolution process would work around the India-backed 13th amendment of the constitution that deals with powers to the provinces.

* He said there were plans to give more representation to the minorities in the upper chamber in Colombo to “neutralise majoritarian tendencies”.

* “We, however, can’t give police powers to the northern and eastern provinces as they don’t have the mechanism to absorb them,” he added. The reference was to the war zone where the Sri Lankan military crushed the LTTE in May 2009, ending one of the world’s longest running insurgencies.

* Stressing that the end of the Tamil Tiger insurgency had presented a “historic opportunity” to build permanent peace, Prasad Kariyawasam unveiled an ambitious bilateral agenda of engagement with India that includes starting talks on a comprehensive economic partnership agreement (CEPA) and a ferry between Colombo and Tuticorin in Tamil Nadu.

* India’s FTA with Sri Lanka was the first such pact India has signed with any country. It has boosted bilateral trade, now estimated to be over $3 billion. “We hope to multiply it to $15-20 billion in another 10 years,” he said.

* China has pledged $350 million as post-war financial aid to Sri Lanka and has bagged a large chunk of development projects which are estimated to be worth over $6 billion. India has pledged Rs.500 crore (around $100 million) for rehabilitation of around 300,000 internally displaced people and is also involved in a wide array of infrastructure projects.

* Lauding India’s assistance in reconstruction of the war-hit areas, the envoy said New Delhi was involved in many infrastructure projects that included railway lines in the country’s north as well as building the Palali airport and the Kankesanthurai port in the Jaffna peninsula.

* “China is an old friend, but India is an older friend. Our relations with India go back 2,000 years. Our political and economic friendship with China will not be at the expense of India,” “We will not be a party to any mechanism or effort to harm India’s strategic interests. Harming India’s interests will be like harming our interests,” he said, when asked to comment about concerns in New Delhi over Beijing’s growing presence in Colombo.
========
Sri Lankan high commissioner to India Prasad Kariyawasam told IANS in an interview .

சேது சமுத்திர மாற்றுவழி குறித்து ஆய்வுப் பணிகள் ஆரம்பம்

சேது சமுத்திர மாற்றுவழி குறித்து ஆய்வுப் பணிகள் ஆரம்பம்
தினக்குரல்-18-02-10
இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் கடலில் சேது சமுத்திர மாற்றுவழி குறித்த ஆய்வுப்பணி தொடங்கியது.ஒளிரும் மிதவைக் கருவியின் அடிப்பகுதியில் கடலுக்குள் இணைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் கருவிகள் மூலம் பெறப்படும் விபரங்கள், இராமேஸ்வரம் சேது சமுத்திர திட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் மொனிட்டரில் பதிவாகிறது. தனுஷ்கோடி கடலில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இதற்கான மாற்றுப் பாதை குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பச்சோரி தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டும் மாற்று வழி குறித்த பணிகள் நடைபெறாமல் இருந்தது.

தற்போது சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படவுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணை கடல் பகுதியில் மாற்றுவழிக்கான கடல் பகுதியில் கடல் சார்ந்த சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுப்பணி துவங்கப்பட்டுள்ளது. பாம்பன் முதல் கோடியக்கரை வரையிலான கடல் பகுதியில் எட்டு மையங்களில் இதற்கான ஆய்வுக்கருவிகள் ஒளிரும் மிதவைகளின் உதவியுடன் கடலில் நிறுவப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் கடல் பகுதியில் கிழக்கே 6 கி.மீ.தூரத்தில் நடுக்கடலில் ஆய்வுக்கருவி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கருவியை பாதுகாக்க அருகிலேயே மீனவரின் படகு ஒன்றும் நிறுத்தப்பட்டு இப்பகுதியில் மீன்பிடிக்க வரும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

மிதக்கும் கருவியின் அடிப்பகுதியில் கடலுக்குள் இணைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் கருவிகள் மூலம் பெறப்படும் விபரங்கள், இராமேஸ்வரம் சேது சமுத்திரத் திட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மானிட்டரில் பதிவாகும். இதுபோல் எட்டு மையங்களில் இருந்தும் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு, சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஓர் ஆண்டு காலம் நடைபெறும் இந்த ஆய்வுப்பணியில், கொச்சியிலுள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday 15 February 2010

ஈழம் இந்து சமுத்திரத்தில் இன்னும் குமுறும் எரிமலை

ஈழம் இந்து சமுத்திரத்தில் இன்னும் குமுறும் எரிமலை

"முஷ்டறக்" இராணுவ நடவடிக்கை

Operation Mushtarak
15,000-NATO-Afghan troops / 100,000 people / 2,000Taliban fighters
*American soldiers said Saturday that firefights with the Taliban began sporadically but grew more frequent and more intense as the day went on.
> Late in the afternoon, insurgents and a company of Marines fought a two-hour gun battle at Marja’s northern edge.
> It ended when the Marines dropped a 500-pound bomb on the Taliban’s position.
* A local Taliban commander named Hashemi, said. “We are strong and we won’t give up. We will fight to death.”
* NATO troops in Marjah had been warning civilians by leaflets that they should try to find a safe place and stay indoors, in order to escape the worst of the battle and to minimise casualties.
* NATO forces had set up 11 outposts across Marja and two in the neighboring town of Nad Ali.
* From those posts, Marines and soldiers began to go on patrols, searching door to door for weapons and fighters.
* “I don’t have any information on the Taliban, neither where they are nor where they have gone,” said Palawan, a farmer in Marja
* “Our main goal in this joint operation is not to kill insurgents,” Defense Minister Mr. Wardak said. “In fact, our primary goal is to expand the government’s influence and protect the civilian population.”
* Brig. Gen. Larry Nicholson, a top Marine commander in the south, predicted it could take 30 days to clear Marjah because of all the hidden explosives.
-----------
NATO's most ambitious offensive against Taliban strongholds in Helmand province entered its second day Sunday, with officials claiming 27 insurgents killed.

Thousands of US Marines, Afghan and British forces were inserted by dozens of helicopters and armoured vehicles into Marjah and Nad Ali districts in the southern province Saturday.

The military operation is the largest since the ouster of Taliban regime by a US-led invasion in late 2001.

NATO officials claimed early success as troops cleared 13 targeted locations in the two districts, strategically important bastions in the country's main opium-producing region.

'The operation is going on successfully,' Daoud Ahmadi, spokesman for Helmand's provincial governor, said. He said seven insurgents were killed since Saturday night, bringing the total Taliban death toll to 27.

He said the combined forces also discovered and destroyed more than 2,500 kg of explosives.

Two NATO soldiers, one British soldier and a US marine were also killed in the first day of the operation, Ahmadi said. The British Defence Ministry also confirmed in a statement posted on its website that a soldier from 1st Battalion Grenadier Guards was killed by an explosion in Nad Ali district.

General Abdul Rahim Wardak, Afghan defence minister, said in Kabul Saturday that there had been some injuries among Afghan forces.

Wardak said several hundred Taliban fighters were still in the area, while a large number of the insurgents had fled before the start of the operation, which was announced weeks prior. Other NATO and Afghan officials estimated that from 600 to 1,000 Taliban were entrenched in the two targeted districts.
< More >

Sunday 14 February 2010

பிரபாகரன் செய்தால் "மனிதக் கேடயம்" ஒபாமா செய்தால் "மக்கள் பாதுகாப்பு"!

Coalition troops force Taliban retreat from key stronghold
Meticulous operation achieves its military objectives with minimal casualties – but what are the implications for President Barack Obama's aim to establish Afghan democracy?
Jason Burke and Mark Townsend The Observer, Sunday 14 February 2010
Observer காட்டிய படம்

US Marines from Bravo Company, 1st Battalion, 6th Marines, protect an Afghan man and his child after Taliban fighters opened fire in the town of Marjah, in Nad Ali district, Helmand province. Photograph: Goran Tomasevic/REUTERS
-----------------------------------------------------

Observer காட்டாத படம்

பிரபாகரன் செய்தால் "மனிதக் கேடயம்" ஒபாமா செய்தால் "மக்கள் பாதுகாப்பு"!
??????????????????????????????????????????????????????????????????

Friday 12 February 2010

கொழும்பில் எதிரணியின் ஆர்ப்பாட்டம் நேற்றுப் பெரும் களேபரத்தில் முடிந்தது!

கொழும்பு, பெப்ரவரி 11
கொழும்பு, உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் புதுக்கடையில் எதிர்க்கட்சியினர் நேற்றுக் காலை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது அரச ஆதரவாளர் குழுவினர் என்று கருதப்படும் ஒரு கோஷ்டியினர் திடீர்த் தாக்குதல் நடத்திய மையை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் பெரும் களேபரத்தில் முடிந்தது.
பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
நாடாளுமன்றம் கலைக்கப் பட்டுள்ள நிலையில், முன் னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்தின ரால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நேற்று இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நேற்றுக் காலை ஆரம்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி அப்பகுதி எங்கும் கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக் கப்பட்டிருந்தனர்.பிறேமதாஸ சிலைக்கு அருகில் வைத்துத் தாக்குதல்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தப் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ வின் சிலைக்கு அருகில் வந்தவேளை ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் திடீரெனத் தாக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்குப் போட்டியாக தாமும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுக்கின்றனர் எனக் கூறிய ஆளும் கட்சி ஆதரவாளர்கள், கற்களையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் பெரும் பதற்றம் நிலவியது.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியிலான மோதல் காரணமாக பலர் காயமடைந்ததுடன், உயர் நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்தன.
பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மனுத்தாக்கல் செய்வதைத்தடுப்பதற்கான முயற்சி
இந்த மோதல்கள் காரணமாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். மூன்று பொதுமக்களும், இரு பொலிஸாரும் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான முயற்சி இதுவெனவும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவரினால் ஒழுங்கு செய்யப்பட்ட காடையர் குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தம் மீது தாக்குதல் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எதிர்க்கட்சியினர் மீதே கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில்!!

ஊடகத்துறை அமைச்சு மகிந்தாவின் நேரடி கட்டுப்பாட்டில் -
கோத்தபாயவின் நடவடிக்கை?
திகதி: 11.02.2010 // தமிழீழம்
சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சகம் அரச தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உடனடியாக கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எனது வேண்டுகோளை தொடர்ந்து சிறீலங்காவின் ஊடகத்துறை மற்றும் தகவல்துறை அமைச்சு அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களை மிகவும் செயல்திறன்மிக்க நிலையில் மேற்கொள்வதற்காகவே நான் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோத்தபாயவின் நடவடிக்கையின் பேரிலேயே ஊடகத்துறை அமைச்சகத்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tuesday 9 February 2010

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

ரொயேட்டஸ் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை
[ புதினப்பலகை ]
சிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -
“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
இதனால் சமூகத்துக்குள் ஏற்படக் கூடிய பிளவுகளைச் சமாளிக்கின்ற பேராற்றல் சிறிலங்கா அரசுக்குத் தேவை. எந்த நடவடிக்கை எடுக்கும் போதும் மிகக் கவனத்துடன் நடக்கா விட்டால், அது சமூகத்துக்குள் காயங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறியுள்ளார்.
“குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இப்படியான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அசாதாரணமானது” என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் - சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காவின் அரசியல்கட்சிகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் வன்முறைகளில் இறங்காமல் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலளர் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேரதல் சட்டங்கள் தனியே தேர்தல் காலத்துக்கு மட்டுமே உரியவையல்ல. அதற்குப் பின்னரும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே - சர்வதேச மன்னிப்புச் சபை, “இது தேர்தலுக்குப் பிந்திய அடக்குமறை” என்று கூறியிருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு எதிரணியைச் சிதைவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, தேர்தலிலும் வெற்றியைப் பெற்ற பிறகு மகிந்த ராஜபக்ச மனித உரிமைகளைச் சிறப்பாகப் பேணுகின்ற நிலைக்கு நாட்டை வழிநடத்த வேண்டும்.
ஆனால் மாற்றுக் கருத்துகளைச் சகித்துக்கொள்ளும் தன்மை அங்கு மிகமிகக் குறைந்து போயிருப்பதைக் காணமுடிகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் சரத் பொன்சேகா சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பதாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday 8 February 2010

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்றனர்

கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மனோ கணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல்
* முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
* கைகளில் விலங்கிட்டு நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது!
கொழும்பு, பெப்ரவரி. 09 2010-02-09 05:37:18
அரசியல் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் தரதரவென இழுத்துச் சென்றனர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவாராம்

முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல்சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில்

கைது செய்யப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட்புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு
சென்றனர்.நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நடவடிக்கை அரங்கேறியது.
இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார் என இலங்கை இராணுவப் பேச்\õளர் பிரிகேடியர் பிரசாத்சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்_ தகவல் வெளியிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணே\ன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில்
ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன் சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜென ரல் பொன்சேகாவின் அலுவலகத்திலேயே இவ்விடயம் இடம் பெற்றது.
இச்சம்பவம் இடம்பெற்று சுமார் பதினைந்து நிமிடங்களில் பின்னர் சம்பவ இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.
"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேக நபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.
"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைது செய்வதானால் சிவில் பொலிஸ் மூலம் கைது செய்யும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பா´ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.
இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் சேல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சென்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.
"அவரைத் தரதரவென இழுத்துச் சேன்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்
சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சென்றனர்.
இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.
ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் சேயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.
அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ)
இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

சரத்பொன்சேகா கைது

சரத்பொன்சேகா கைது
திங்கள், பிப்ரவரி 8, 2010 21:21 |
சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டார்

சிறீலங்காவின் முன்னாள் இராணுவ கட்டளை தளபதி சரத்பொன்சேகா அவர்கள் திங்கட்கிழமை இரவு சிறீலங்காவின் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைது ராஐகீய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலத்தில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இவரை மிகவும் கேவலாமான முறையில் கைது செய்து இழுத்துக்கொண்டு சென்றுள்ளதாகவும் இதனை ரவூப் ஹக்கீம் அவர்களும் ஏனையோரும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி மன்றில் சாட்சியமளிக்க தான் தயார் என இவர் அறித்ததைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Fonseka to be court marshalled

Fonseka to be court marshalled
Monday, 08 February 2010 22:20
General Sarath Fonseka who was arrested late this evening will be Court Marshalled for the military crimes he has committed, Director General of the Media Centre for National Security Lakshman Hullugala told state television a short while ago.Fonseka has been accused of revealing military secrets and also plotting the assassination of President Mahinda Rajapaksa.

Sunday 7 February 2010

ராஜபக்ச ரசியாவின் KP

ன்றுள்ள உலக ஏகாதிபத்திய பொதுப் பொருளாதார நெருக்கடியில், இதன் விளைவாக குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சாதகமான சூழ்நிலையில் அபரிமிதமான எண்ணை வளத்தைக் கொண்டும், ஆயுத விற்பனையைக் கொண்டும் மீண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்த்துக்கொள்ள பூட்டினின் ரசியா முயன்று வருகின்றது.இப்பலத்தையே உலக மறுபங்கீட்டிற்கான தனது ஆயுதமாகவும் ரசியா பயன்படுத்திவருகின்றது.இந்து சமுத்திரப் பிராந்தியதை இந்தியாவைக் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவது அமெரிக்காவின் யுத்ததந்திரத் திட்டமாக உள்ளது.இதற்குப் போட்டியாக ரசியாவும், சீனாவும், ஈரானும் எழுந்து வருகின்றன.இத்தகைய ஒரு உலக மற்றும் பிராந்திய மேலாதிக்கத்துக்கான - உலக மறு பங்கீட்டிற்கான- சூழ்நிலை இலங்கை போன்ற அரைக்காலனி நாடுகளின் தரகு ஆளும் கும்பலுக்கு பேரம் பேசும் பரப்பையும் ஆற்றலையும் விரிவாக்கிக் கொடுத்துள்ளன.இந்த இடைவெளிக்குள் நடத்தும் பேரத்தைப் பயன்படுத்தித்தான் தான் மேற்குலகத்திற்கு அடங்காத காளையென்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றார் ராஜபக்ச.ரசியா போன்ற சாவு வியாபார அரசுகளின் நலன்களுக்கும், ராஜபக்ச போன்ற இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியாளர்களின் நலன்களுக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.இந்த ஆயுத வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட கெளரவமே இந்த கலாநிதி பட்டம்.
மேலும்

Thursday 4 February 2010

சம்பந்தன் ஒரு சாக்கடை

சம்பந்தன் ஒரு சாக்கடை-யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு
வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார் தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையாக வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கியுள்ளார் சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நப்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். மேலும்

செங்கல்பட்டு: காட்டுமிராண்டி கருணாநிதி ஆட்சியின் காடைத்தனம்

நீ வேறு நான் வேறு இல்லைக் கருணா
சிங்கள - பவுத்த வெறியன் மகிந்த இராபச்சே தமிழர்களைச் சிறைகளில் அடைத்து வைதது சித்திரவதை செய்கிறான் என்றால் அவனை மிஞ்சும் வண்ணம் செம்மொழி மாநாடு நடத்தும்
கருணாநிதியின் ஆட்சியில் இந்த காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார். "ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள். எமது தொப்புள்க் கொடி
உறவினர்" என கருணாநிதி மாய்மாலம் பேசுவதில் மட்டும் எந்தக் குறையுமில்லை. மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று "ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று
சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்கள் செல்லடியிலும் குண்டுமழையிலும் பொட்டுப் பூச்சிகள் போல் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில்
முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
அது மட்டுமல்ல அங்கு அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் பங்காளியாக இருக்கும்
திமுக தலைவர் கருணாநிதியும் காரணம் ஆவார். அவர் கையிலும் ஈழத்தமிழர்களின் பச்சை இரத்தம் பூசப்பட்டுள்ளது. அவரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.
<தமிழ் படைப்பாளிகள் கழகம்>

மேலும்

62 ஆண்டுகால ஏகாதிபத்திய அரைக்காலனியாதிக்கத்தை மூடிமறைக்கும் அரசுத்தலைவரின் 'பயங்கரவாதத்திலிருந்து சுதந்திரம் பெற்ற' உரை

2010-1948= 62 President's Speech at the 62nd Independence Day
Feb 4, 2010
My dear people
Today is our Independence Day. It is a very happy day for all of us. Thirty years of terrorism is now over. We are celebrating our independence in such an atmosphere for the first time. Now all of you can live in consolation without fear or doubt.
Anyone can go anywhere freely. That is very important. This is our motherland. All of us are children of one mother. All of us are kings today. We all should live together as brothers with equal rights and with dignity. Let us discuss our issues among ourselves and resolve them.
Everyone will receive all facilities in equal manner. That is called equality and equal rights.
One country, one people, one law. That is our way, the only way.
Thus, there is no racism, separatism or terrorism. Never forget the motherland; never betray it. We consider no one in our country as a minority person. All those who love the country are children of Mother Lanka.
Our motherland is emerging as a hub of development. Democracy should be protected forever.
Recently, the people of Northern and Eastern provinces too were able to vote democratically. I am very pleased about it. Politicians should not mislead the innocent people.
Hereafter, we will not entertain narrow divisions based on race, religion, language and political ideology in terms of regions. Never leave room for the politics of hate. Peace, brotherhood, co-existence and prosperity -- that is our prime objective.
Let us join together. Let us build this country for the sake of our future generations.
More
"உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!
"பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள் வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை; உரிமையுமில்லை.
செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள்"
உதயன் ஆசிரியர்
இதற்கு "உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும்''.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சிவநாதன் கிஷோர்
மேலும்:

Wednesday 3 February 2010

லண்டன் மாணவர் போராட்டம் முறியடிக்கப்பட்டது எவ்வாறு? பரமேஸ்வரன் விளக்கம்.

2009 ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை முறியடிக்க மேட்டுக்குடித் தமிழர் தலைமை எவ்வாறெல்லாம் முயன்றது என்பதை விளக்கி, அறிக்கை ஒன்றை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார் பரமேஸ்வரன். உண்ணாவிரதப் போராளி பரமேஸ்வரனின் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
Parameswaran's e-mail < s.parameswaran@live.com >

Tuesday 2 February 2010

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்

AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE

Paper no. 3643 02-Feb-2010
AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE
By Dr. Subhash Kapila
Introductory Observations
Afghanistan, the hapless Muslim nation, brutalized for a decade by the medieval fundamentalist Islamic regime of the Taliban which was superimposed by Pakistan, is inextricably enmeshed in the conflicting strategic interests of the United States, Pakistan, Saudi Arabia and China.

The London Conference held on January 28, 2010 on Afghanistan flaunted by the United Kingdom as finding a ‘new roadmap’ for peace and stability in Afghanistan is foredoomed to failure as it has significantly deviated from US original war aims which prompted its military intervention in Afghanistan post-9/11. .................... ........................................ >>>
Concluding Observations
The United States military intervention in Afghanistan in December 2001 took place with the strategic aims of liquidating the Al Qaeda and Taliban from Afghanistan post-9/11. This strategic aim was reiterated by President Obama as late as March 2009 in the Af-Pak Strategy Blueprint.



In January 2010 the prime US strategic aims still remain unachieved. They stand unachieved primarily because US military planners have been reluctant to ‘Surgically Disconnect” Pakistan from interferences in Afghanistan’s stability – a fact now acknowledged growingly in US policy making circles.

If after such an acknowledgement at the highest US military levels, the United States becomes a partner to the diabolical British- Pakistan joint plan to rehabilitate the Taliban in power-sharing in Kabul which would lead to an eventual Taliban regime in Afghanistan, then the United States strategic vision on Afghanistan even after a decade of military involvement there, can at best be termed as strategically myopic.

Saudi Arabia and Pakistan have been the major instigators of Afghanistan’s instability historically. Both were instrumental in the installation of Al Qaeda and Taliban in Afghanistan. How can then in United States perceptions can they now emerge as saviors of Afghanistan?

The London Conference 2010 Roadmap on Afghanistan is doomed to strategic failure due to the seeds of failure inherent in its misplaced strategic vision on Pakistan’s strategic utility to the West and the West’s willingness to accommodate the Taliban in power-sharing in Kabul at Pakistan’s behest.
(The author is an International Relations and Strategic Affairs analyst. He is the Consultant, Strategic Affairs with South Asia Analysis Group. Email: drsubhashkapila.007@gmail.com)
More

Monday 1 February 2010

தமிழீழ தனியரசுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் அமோக ஆதரவு: 99.33 வீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு
[ திங்கட்கிழ, 01 பெப்ரவரி 2010, 04:17.43 AM GMT +05:30 ]
நேற்றும்(31/01), நேற்று முன்நாளும்(30/01) பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 64,692 பேர் கலந்து கொண்டதுடன், 64,256 பேர் (99.33 வீதம்) ஆம் எனவும், 185 பேர் (0.29 வீதம்) இல்லை என்றும் வாக்களித்த அதேநேரம், 251 பேர் (0.38) தகுதியற்ற வாக்குகளையும் அளித்துள்ளனர்.

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான ஆணையை மீண்டும் வலியுறுத்தும் வகையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வேணவாவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 அகவைக்கு மேற்பட்ட இளையோர் முதல் மூதாளர்வரை மிகுந்த உற்சாகத்துடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் வாக்களித்திருந்தனர்.

சனிக்கிழமை லண்டனிலும், லண்டனிற்கு வெளியே கிளாஸ்கோவில் (Glasgow) இருந்து சவுத்தம்ரன் (Southampton) வரையும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், எம்-25 நெடுஞ்சாலைக்கு உட்பட்ட லண்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து லண்டனின் மத்தியிலுள்ள கிறீன் பார்க்கில் அமைந்துள்ள செறரன் - பார்க் லேன் விடுதியில் நடைபெற்ற முடிவு அறிவிக்கும் நிகழ்வில் பிரித்தானிய ஈழத்தமிழ் மக்களின் அபிலாசை வெளியிடப்பட்டது. இரவு 10:30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், பொதுச்சுடரை பேராசிரியர் தீரன் ஏற்றி வைக்க, இளையோரான ராஜி நேசராஜா வாக்கெடுப்பின் பின்னணி பற்றி எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பறி காட்னர் (Barry Gardner), நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Shiobhain McDonagah), பேராசிரியர் தீரன் (Prof.Theeran), ஹுகோ சால்ரன் (Hugo Chalton), மொறீசியசைச் சேர்ந்த ராஜ் புத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் (Joan Ryan), நாடாளுமன்ற உறுப்பினர் அன்றூ பெலிங் (Andrew Pelling), நாடாளுமன்ற வேட்பாளர் அன்றூ சரலம்பஸ் (Andrew Charalambous) ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பேராசியர் பிறையன் வுட்றிப் (Bryan Woodriff), மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய மைக் கிறிபின் (Mc Griffin) ஆகியோர் தேர்தல் முடிவுகளை மக்களின் அமோக கரவொலியின் மத்தியில் அறிவித்தனர்.

இதனையடுத்து கருத்துக் கணிப்பு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் தேசிய சபையின் சிறீரஞ்சன், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய இளையோர் அமைப்பைச் சேர்ந்த ராஜ் செல்வா ஆகியோர் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி உரையாற்றினர்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களிற்கான தீர்வு என 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்தே 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுக்கான வேணவாவை பன்னாட்டு சமூகத்திற்கு மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் இந்த “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்து வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே நோர்வே, பிரான்ஸ், கனடா, யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதுடன், தமிழீழத் தனியரசுக்கான தமது விருப்பை புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...