Tuesday 28 September 2010

Sri Lanka: Beyond Lawful Constraints: Sri Lanka´s mass detention of LTTE suspects

Sri Lanka: Beyond Lawful Constraints: Sri Lanka´s mass detention of LTTE suspects
Although the conflict between the Government of Sri Lanka (GoSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) ended in May 2009, the GoSL continues to detain approximately eight thousand individuals under administrative detention without charge or trial. “Beyond Lawful Constraints: Sri Lanka’s Mass Detention of LTTE Suspects” addresses the human rights concerns arising from the world’s largest mass detention of persons held in connection with an internal armed conflict. The ICJ is concerned that the GoSL’s “surrendee” and “rehabilitation” regime fails to adhere to international law and standards, amounting to an arbitrary deprivation of liberty and denial of the right to a fair trial.
http://www.icj.org/dwn/database/BeyondLawfulConstraints-SLreport-Sept2010.pdf

Monday 27 September 2010

குமுறி நின்றதோர் புயல் படுத்தது


சாவு தின்னுதே சாவு தின்னுதே

தங்க மேனியை சாவு தின்னுதே

வந்து பாரடா வந்து பாரடா

நொந்த மேனியை வந்து பாரடா

குரல் எடுத்ததோர் குயில் படுத்தது

குமுறி நின்றதோர் புயல் படுத்தது

தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது

- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பதிவு: புதிதாய் பிறப்போம் நன்றி தமிழரசி


லண்டனில் திலீபன் நினைவு வணக்க நிகழ்வு


லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று (26-09-2010) மாலை 6:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 9:30 மணிவரை மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் உணர்வுபூர்வமாக ...முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் முதலாவதாக மாவீரர்களான ரகு (சுப்பிரமணியம் சிவரூபன்), குகன் (சுப்பிரமணியம் சிவகாந்தன்) ஆகியோரின் சகோதரி தவமலர் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாவீரர் சஜீவனா அவர்களின் சகோதரர் மதீஸ்வரன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
மற்றுமோர் இந்திய சதியாலும், துரோகத்தாலும் சிக்குண்டு அவர்களின் திட்டம் நிறைவேறாமல் தாமே நஞ்சருந்தி வீரகாவியமான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பத்து வேங்கைகளின் நினைவாக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவீரர் நிதி (தில்லையம்பலம் சிவசிகாமணி) அவர்களின் சகோதரர் தி.சிகாமணி அவர்கள் மலர்மாலையை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் இதுவரை காலமும் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், தாயகத்தில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினை தொடர்ந்து மக்களினால் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என கூறிய திலீபனின் நிகழ்வில் மண்டபம் நிறைந்து பல நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு மலர்வணக்க நிகழ்வில் கலந்துகொண்டமையானது அவரது கோரிக்கையை நிறைவேற்றுவது போன்றும், தொடர்ந்து வீறுகொண்ட மக்களாக விடுதலைப் போருக்கு தயாராக உறுதியோடு இருப்பதையே காட்டுவதாக இருந்தது.

தியாக தீபம் திலீபன் உட்பட செப்ரம்பர் மாதத்தில் வீரமரணத்தை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இந்த நினைவுவணக்க நிகழ்வில் கடந்த 23 ஆம் திகதியன்று பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இருந்து மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து துவிச்சக்கர வண்டியூடான விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் மாலை 7:45 மணியளவில் நிறைவு செய்து அங்கே தனது மலர்வணக்கதையும் திலீபனுக்கு செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் எழுச்சிக் கானங்களை தொடர்ந்து சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூட மாணவிகளின் நடனமும், திருமதி.சிவதீபா, செல்வி.சஞ்சிதா சத்தியேந்திரன், செல்வி.மதுமிதா மகேந்திரன், திருமதி.லலிதசொரூபினி, கவிஞர் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் கவிதைகளும், செல்வி.ஜான்சி கருணாகரன், திரு.ஜெயானந்த மூர்த்தி, திரு. ராஜமனோகரன், திரு.லோகேஸ்வரன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

கடந்த மூன்று நாட்களாக துவிச்சக்கர வண்டியூடான விழிப்புணர்வு போராட்டத்தை நடாத்தி திலீபனின் நினைவுவணக்க நிகழ்வில் நிறைவு செய்த திரு.யோகேஸ்வரனை வரவேற்று வாழ்த்தி உரையாற்றிய
திரு.ராஜமனோகரன் அவர்கள் கூறுகையில்....
தேசியத்தலைவன் பிரபாகரன் உருவாகினான், காரணம் மனிதநேயம். நாம் பிறருக்காக செய்வதும், வாழ்வதும் தான் ஆன்மீகம். அதைத்தான் தலைவர் பிரபாகரனும் செய்தார். திலீபனும் செய்தான், மாவீரர்கள் அத்தனைபேரும் செய்தார்கள். வெல்பவன் தான் சரித்திரத்தை எழுதுபவன். இன்றைக்கு எமது சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது என்றால் நாம் வெல்லவேண்டும். அதற்கு தான் தலைவனும் முயன்றான். எமக்கான வெற்றி என்பது பின்போவதற்கு காரணம் எம்முள் அதிகளவானோர் பயந்தவர்களாகவும், காட்டிக்கொடுப்போராகவும் இருப்பதனால் தான்.
இன்றுவரை வீரகாவியமான மாவீரர்களுக்குள் எத்தனைபேருக்கு வாரிசுகள் உண்டு. அதிகமானோருக்கு இல்லை. ஏனென்றால் ஆற்றல் மிக்கவனும், துணிந்தவர்களுமாக உள்ள இளவயதினர் எல்லோரும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வீழ்ந்துபோனார்கள். மீதமுள்ள பயந்தவர்களும், காட்டிக்கொடுப்போருமே அதிகளவில் எஞ்சியிருக்கிறோம்.

எமக்கு நாமே எதிரியாக இருக்கிறோம். எனவே நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே நாம் எமக்கான விடுதலையை வென்றேடுக்க முடியும். எம்மால் ஆன அதிகூடிய பணியை எமது மண்ணினதும், மக்களினதும் விடிவிற்காக செய்யவேண்டும், திரு.யோகேஸ்வரன் போன்று உங்களால் முடிந்த மனித நேய செயற்பாடுகளில் அனைவரும் பங்கெடுக்கவேண்டும் எனக் கூறினார்.

திரு.லோகேஸ்வரன் அவர்கள் உரையாற்றுகையில்.....
தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலைபெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்வேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு நாளில் நாம் அவரைபோல் இல்லாவிடினும் எம்மால் ஆனவற்றை எம்மக்களுக்காகவும், மக்களின் விடுதலை நோக்கியும் செய்யவேண்டும். அதில் முதலாவதாக எனது கோரிக்கைகளில் ஒன்றான
1) எமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, பிளவுகள் இன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து தாயக விடுதலை நோக்கிய பாதையில் செல்லவேண்டும்.
2) தடுப்பு முகாம்கள் மற்றும், வதை முகாம்களில் சொல்லொணா துயரை அனுபவித்துவரும் மக்களும், போராளிகளும் விடுதலை செய்யப்பட சர்வதேசங்கள் ஆவன செய்யவேண்டும்.
3) தாயகத்தில் எமது மாவீரர்களின் கல்லறைகளும், நினைவாலயங்களும் சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வரும் இவ்வேளையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் எமக்காக ஆலயங்களை அமைத்து வழிபாடு செய்துவருவது போன்று அந்த ஆலயங்களில் எமது மாவீரர்களை நினைவுகூரும் நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் மாவீரர்களை நினைந்து வழிபாடு செய்வதற்கு வகை செய்யவேண்டும்.
உலகிலேயே முதன் முதலாக லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அவ்வாறான ஒரு நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்மாதிரியாக கொண்டு அதுபோன்ற நினைவாலயங்கள் புலம்பெயர் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படவேண்டும். என்று கூறினார்.

திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகையில்....
ஆயுதம் மெளனிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் கை விடப்படமாட்டாது , அது தொடர்ந்து கொண்டே செல்லும் என்பதை சர்வதேசமும், அயல் நாடான இந்தியாவும் புரிந்துகொள்ளவேண்டும்.
எமது போராட்டம் என்பது விழுந்துவிடவில்லை. வீழ்த்தப்பட்டுள்ளது. அது நிச்சயம் மீண்டும் எழும். புலம்பெயர் தேசங்களிலே சிலர் எமது போராட்டத்தை திசை திருப்பவும், எமக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எம்மக்கள் அந்த வஞ்சக வலைக்குள் வீழமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும், இடர்களுக்கும் மத்தியில் பல சாதனைகளை புரிந்து, பல கட்டுமானங்களை வளர்த்து உலகின் முன் எழுந்துநின்ற எமது தேசியத்தலைவனின் பாதையில் தமிழர்கள் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த நிகழ்வில் சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூட மாணவிகளால் "எம் தலைவன் சாகவில்லை, என்றும் புலி தோற்பதில்லை" என்ற பாடலுக்கு வழங்கப்பட்ட நடனத்தின் போது அங்கிருந்த பெருந்தொகையான் மக்களின் கரவொலியால் மண்டபமே அதிர்ந்தது.

பிரித்தானிய ஐக்கிய தமிழர் செயற்பாட்டு குழுவால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு மீண்டும் மக்கள் மனங்களில் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளதோடு, உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது.

நன்றி: Mkseivam Kavi அழுத்தம் ENB

ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி லண்டனில் ஆர்ப்பாட்டம்

எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட காஸ்மீர் மக்களைப் படுகொலை செய்த இந்திய அரசையும், இப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கிய பிரித்தானிய அரசையும் கண்டித்து லண்டனில் JKLF ஆர்ப்பாட்டம்.









கஸ்மீர் தேசம் மீதான இந்திய பாகிஸ்தானிய தலையீட்டை எதிர்ப்போம்!

எழுபதினாயிரம் இந்தியப் படைகள் கஸ்மீரில் நடத்தும் தேசியப் படுகொலையை அம்பலப்படுத்துவோம்!

கஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!சர்வதேச சகோதரத்துவத்தின் பேரால் கஸ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்று சேருவோம்!

========= புதிய ஈழப்புரட்சியாளர்கள் =========

Sunday 26 September 2010

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்பு

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்பு.
இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை பான் கீ மூனின் நிபுணர் குழு விசாரிக்காது! ஜனாதிபதி மஹிந்தவிடம் பான் கீ நேரில் தெரிவிப்புயாழ்- உதயன் 2010-09-26 08:27:00 நியுயோர்க், செப்ரெம்பர்

இலங்கை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு மட்டுமே அந்தக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச்சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் விளக்கியுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா.செயலாளருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதியின் அலுவலகம் இங்கு வெளியிட்ட அறிக்கையில்
இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானது என்றும் பெரும் பயன் உடையது என்றும் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையில்
சிலாகிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இருவருக்கும் இடையிலான சந்திப்புக் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதிக்கு அந்நாட்டு மக்கள் வழங்கியுள்ள அரசியல் ஆணை நாட்டிற்கான அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு
தனித்தன்மையுள்ள விசேடமான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் செயற்பாடுகளையும் அதற்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கள் குறித்தும் ஐ.நா. செயலாளருக்கு விரிவாக விளக்கினார். ஆணைக்குழு முற்று முழுதான வெளிப்படைத் தன்மை கொண்டது. நீண்ட கால பிரச்சினைக்கான உண்மையான காரண காரியங்களைக் கண்டறிந்து, அத்தகைய தகராறுகள் இனிமேலும் நாட்டில் தலையெடுக்காது இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சிபார்சு செய்வதே ஆணைக்குழுவின் பணியாக அமையும் என்றும் ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு
விரித்துரைத்தார் என்று ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழு, போரின் போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணைகளை நடத்தியது. ஆணைக்குழுவின் முன் விரும்பிய எவரும் சாட்சியம் அளிக்க வகை
செய்யப்பட்டுள்ளது.




எமது நாட்டில் நல்லிணக்கத்தை தோற்றுவிக்கவும் நீதியைப் புதுப்பித்து நிலை நாட்டவும் உதவும். தகுதியுள்ள கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்க நல்லிணக்க ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது என்பனவற்றை மஹிந்த ராஜபக்ஷ, பான் கீமூனுக்கு விரிவாக தெளிவுபடுத்தினார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட
அறிக்கை விஸ்தாரணம் செய்தது.மஹிந்த பான் கீ மூன் சந்திப்பின் போது அகதிகளுக்கான ஐ.நா. தூதரகமும் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பணியாற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் போர்
நடைபெற்ற பகுதியில் மீள்குடியேற்றம் வேகமாக நடை பெறுவதை வெளிச்சப்படுத்தி உள்ளன. ஆகையால் இனிமேல் அங்கிருந்து மக்கள், குழுக்கள் குழுக்களாக வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய தேவை இருக்கமாட்டாது என்று ஜனாதிபதி செயலாளர் நாயகத்துக்கு விரிவாக எடுத்துக் கூறினார். வடஇலங்கையின் அபிவிருத்திக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அரசு செய்து வரும் பணிகள் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கான வழிமுறைகள் ஆகும் என்றும் அப்பகுதி மக்களுக்கான புனர் வாழ்வு மற்றும் புனருத்தாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு மிக விரிவாக எடுத்துக்கூறி இருந்தார் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.பிற்குறிப்பு: இது ஒன்றும் புதிய செய்தி கிடையாது.ஐ.நா.சபை அந்தக்குழுவை அமைத்த போதே அது பான் கீ மூனுக்கு இலங்கை நிலைமை தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவாகத்தான் அமைக்கப்பட்டது.அவ்வாறு தான் அவர்களால் சொல்லப்பட்டது.அவ்வாறுதான் அவர்களால் அழைக்கப்பட்டது.இதனை யுத்தக் குற்ற விசாரணைக்குழு என மக்களுக்கு
பொய்யுரைத்தவர்கள் நவீன காலனியாதிக்கத்தின் தமிழ்த்தாசர்களும், அவர்களது ஊடகங்களுமே! இதை உசுப்பேற்றி விட்டது நெடுமாறன் -வை கோ- சீமான் கும்பல்!இவர்களது புணர்ச்சியில் பிறந்த ' தமிழீழ புரட்சிகர மாணவர்கள்' இந்தப் பாதையில் 'நடக்கத்' தொடங்கினர். உலகெங்கும் நவீன காலனிய தேசிய ஒடுக்குமுறையின் அவமானச்சின்னமாக விளங்கும் ஐ.நா.சபையில் ஈழதேசத்துக்கு நீதி கிடைக்கும் என மக்களுக்கு தவறான வழியைக் காட்டினர்.தமிழீழ மக்களே, தவறான வழிநடத்தலுக்கு கொடுத்த விலை போதும்! விழிப்படைவீர்! விழிப்புடன் இருப்பீர்!!விதேசிகளை என்றும் எதிர்ப்பீர்! தேசியம் காப்பீர்! ஜனநாயகம் காப்பீர்!.விடுதலைக்காக தொடர்ந்து போராடுவீர்!.

Friday 24 September 2010

JKLF appealed to people in Britain to join Protest in London on 26th Sep. 2010


=============================
Time : 26 September · 13:00 - 15:00
Number 10 Downing Street, London, UK
=============================
Organised by: Jammu Kashmir Liberation Front (JKLF) UK Zone
More info: JKLF has again organised a protest against Indian brutalism in Kashmir. This time the protest will be held in front of British Prime Ministers Office 10 Downing Street London on Sunday 26th of September 2010, (1 pm).
Britain being one of the largest arms supplier to India, therefore we demand British Government to review its arms pact with India as these arms are being used against innocent civilians in Kashmir.
We request all freedom loving people in Britain to participate in this protest and raise their voice against brutality, occupation and in favour of Kashmiris National emancipation.
http://senthanal.blogspot.com/2010/09/blog-post.html

ஐ நா சபையில் ராஜபக்ச கொள்கை முழக்கம்!


ஐ.நா சபையில் ராஜபக்ச கொள்கை முழக்கம்!
உள் நாட்டில் அமைதி- அபிவிருத்தி, பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திர தனியரசு, ஆபிரிக்க நாட்டுத் தலவர்களுக்கு அதிக சுயாதீனம், கியூப நாட்டுமக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பு,வறுமை ஒழிப்பு, பூமி வெப்பமடைதலைத் தடுக்கநடவடிக்கை, ஐ.நா.'அமைதிப்படைகளுக்கு' ஆட்பலம் சேர்க்க உறுதி, உலக சமாதானத்துக்கு ஆதரவு- என சரமாரியாக ராஜபக்ச கொள்கை முழக்கம்!
==============================
Sri Lanka pledges enhanced support for UN peacekeeping missions
President Mahinda Rajapaksa of the Democratic Socialist Republic of Sri Lanka23 September 2010 – Sri Lanka is ready to boost its participation in United Nations peacekeeping operations, President Mahinda Rajapaksa told the General Assembly today, also calling on the world
community to take urgent action to counter climate change and devote greater aid to Africa.At the same time he recalled his country’s defeat last year of Tamil separatist rebels – “one of the most brutal, highly organized, well funded and effective terrorist organizations” – and stressed that Sri Lanka’s healing must evolve from within since “imposed external solutions” breed resentment and ultimately fail.
“Leaders who have been chosen by their people often face difficult decisions,” he said. “They must be entitled to the goodwill and confidence of the international community with regard to the heavy burdens they are required to shoulder. The results of their decisions must be evaluated objectively and must be allowed to speak for themselves.
“That is not to say countries should operate in isolation. In this globally inter-dependent world, we must work together where we can and constructively counsel each other where appropriate. The United Nations forms the bedrock of this interaction and in this role it will always receive the support of Sri Lanka.”
Earlier this year Secretary-General Ban Ki-moon appointed a panel of experts to advise him on accountability issues relating to alleged human rights violations during the final stages of the Sri Lanka conflict in accordance with a commitment on accountability made in a joint statement issued with Mr. Rajapaksa on a visit the island country in May 2009.
The conflict, which had raged on and off for nearly three decades and killed thousands of people, ended with large numbers of Sri Lankans living as internally displaced persons (IDPs), especially in the north of the country.
Today Mr. Rajapaksa said 90 per cent of the IDPs had returned to their original villages, now cleared of landmines, and had been provided with the essential infrastructure necessary to resume normal lives.
“Over the past year, much has been reported and much has been said regarding my country’s liberation from terrorism,” he declared. “However, far less has been said of the suffering we had to undergo and the true nature of the enemy we have overcome…
“The asymmetrical nature of conflicts initiated by non-State actors gives rise to serious problems which need to be considered in earnest by the international community.”

Thursday 16 September 2010

ஐ.நா.வில் ராஜபக்ச!

''எத்தனை நாள் துயின்றிருப்பாய் எனதருமைத் தாயகமே!''
ஐ.நா. அமர்வில் பங்கேற்க ஜனாதிபதி பயணம்
ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளார்.ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் முதற்கட்ட அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் ஆரம்பமானது.இதனையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குக் கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.இதையடுத்து 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையும் பின்னர் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையும் பொது விவாதம் நடக்கவுள்ளது.ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ நேற்று புறப்பட்டு உத்தியோகப்பற்றற்ற விஜயமாக ஜேர்மன் சென்றதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேர்மனியில் இருந்தே 20 ஆம் திகதியளவில் ஜனாதிபதி நியூயோர்க் செல்லவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.

மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு பற்றி ஆராய்ந்து தனக்கு ஆலோசனை கூறவென ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசேட நிபுணர் குழுவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday 7 September 2010

சிங்களத்தின் முள்ளிவாய்க்கால்

Supreme Court declared that the constitution can be amended by a vote in parliament, and a referendum is not needed to endorse the changes.

Monday 6 September 2010

பக்ச பாசிஸ்டுக்களின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்!


பக்ச பாசிஸ்டுக்களே உத்தேச 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நாடு தழுவிய மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை அறிவி!
திரைமறைவில் விலை கொடுத்து வாங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றாதே!

உயர் நீதிமன்றமே மக்கள் நலனுக்கு சார்பாக தீர்ப்பளி!

http://senthanal.blogspot.com/2010/09/18.html

பக்ச பாசிஸ்டுக்களின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்!தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

நாடு பரந்த பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Friday 3 September 2010

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? 6 ஆம் திகதி தீர்மானம் ‐ மாவை சேனாதிராஜா

உத்தேச அரசியலமைப்புத் திருத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 6 ஆம் திகதி கூடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்னும் மேற்கொள்ளாததால், அது குறித்து மேலதிகமான எதனையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

PFLP leader arrested in Nablus by Palestinian Authority forces

Comrade Ahmad Al-Mesh'ati, a leader of the Popular Front for the Liberation of Palestine in Nablus, was kidnapped in Nablus by Palestinian Authority security and intelligence forces on Tuesday, August 24, 2010. Comrade al-Mesh'ati has been "wanted" by the Israeli occupation forces for a number of years. Comrade Zaher al-Shishtari, representative of the PFLP in Nablus, said that the Front holds the Authority fully responsible for his safety and security and demanded his immediate release.
Comrade al-Shishtari said in a press release that "our comrade was arrested as the streets of the Palestinian West Bank have become an amusement park for Israeli soldiers to enjoy themselves and walk about freely. We hold the Authority fully responsible for the safety of our comrade kidnapped by the PA intelligence services."
He warned the Authority of the consequences of its continued policy of targeting and arresting resistance figures as the occupation attacks continue, demanding that the PA immediately end its so-called "security cooperation" with the occupation's army of killers and to release all members of the resistance held in PA jails and prisons immediately, saying that such policies only serve the interests and the implementation of occupation policies and are a betrayal of the Palestinian resistance and the Palestinian people.
=====================================
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளருக்கும் சேவகம் செய்யும் சமரசவாத அபாஸ் கும்பலின் 'பாலஸ்தீன அதிகார சபையே', பாலஸ்தீன மக்களின் புரட்சிகர,தேசியவாத,மதவாத சக்திகளின் விடுதலைக் குரலை நசுக்காதே!
பகிரங்கமாக ஒன்றுகூடும், பாலஸ்தீன மக்கள் சார்பில் கருத்துரைக்கும் ஜனநாயக உரிமையைப் பறிக்காதே!
கைது செய்துள்ள பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
===========================================

Wednesday 1 September 2010

செப்டம்பர்-12 இந்திய புரட்சிகர தேசபக்த தியாகிகள் தினம்!

செப்டம்பர்-12 இந்திய புரட்சிகர தேசபக்த தியாகிகள் தினம்!
இத்தினத்தில் ஆற்றவேண்டிய புரட்சிகரக் கடமைகளை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முழக்கங்களாக்கி, அரசியல் பிரசுரமாக தமிழக மக்களிடையே விநியோகித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.அப்பிரசுரத்தின் முழு முழக்கங்களையும் படிக்க மாமேதை லெனினின் மெற்கண்ட உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்யவும்.

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...